மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 12 அக்டோபர், 2013

நவராத்திரி என்றால் என்ன.? Navaraththiri

நவராத்திரி என்றால் என்ன..؟
 
 
           நவராத்திரி - ஒன்பது ராத்திரி - இந்த ஒன்பது ராத்திரியும் நமது பாராசக்தியை வெவேறு தேவதையாக பாவித்து வணங்குவது. ஒவொவொரு சக்தி தேவியாக வழிபாட்டு இறுதியில் இந்த அனைத்து சக்தியையும் சேர்த்து தசமி திதியில் அதி பயங்கர சக்திவாய்ந்த அன்னை பாராசக்தியாக வழிபடுகிறோம். ஒன்பது நாள் இரவு சக்திபுஜை விரதம் இருந்து செய்து வந்தால் பத்தாவது நாள் நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதை நிச்சயம் அடைவோம், அதனால் தான் " விஜயதசமி " என்கின்றோம்.
 
        நவராத்திரி விரதம்: புரட்டாசி அமாவாசையின் மறுநாள் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் கொலு பூஜை செய்து கன்னிப்பெண்கள் & சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்கும பிரசாதங்கள் தந்தால் துன்பங்கள் நீங்கி வீட்டில் செல்வம் நிலைக்கும்.
      நவராத்திரிவிரதம் இருப்பதால் நாம் சரஸ்வதி, லக்ஷ்மி, ஈஸ்வரி என்கின்ற முப்பெரும் தேவியர்களின் அருளை ஒரே நேரத்தில் பெறுகின்றோம்.
        ஸ்ரீராமன் இந்த நவராத்திரியில் ராவணனுடன் போர்புரிந்து தசமி திதியில் துர்காவை வழிபட்டதால் வெற்றி கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர்.
     துர்க்கை பத்து நாட்கள் போர் புரிந்து மகிஷாசுரனை வென்ற தசமி திதியில் தசரா விழா கொண்டாடப்படுகின்றது.
     ஜென்ம ஜாதகத்தில் ராகு கேதுவால் உள்மனதிற்குள் ஏற்படும் பயத்தை போக்க இந்த நவராத்திரி விரதம் மிகசிறந்த உபாயமாகும்.
       தசமி வெற்றியின் திதி என்பதால் இன்றைய நாளில் வணிகர்கள் புதுகணக்கை துவக்கி லாபத்தை அடைகின்றனர். குழந்தைகளுக்கு அட்சர ஆரம்பம் இன்றைய நாளில் செய்கின்றனர்.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 
 
 
 
 

சனி, 5 அக்டோபர், 2013

பணவீக்கம் ஏன்..? - ஜோதிட காரணம் Inflation


இந்தியாவில் பணவீக்கம் ஏன்..? -  ஜோதிட காரணம்.

 
                   கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இந்தியாவின் முக்கிய செய்தியாக பணவீக்கம் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மிக மிக குறைந்து உள்ளது. சொல்லபோனால் 150% மேலாக அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியுள்ளது. தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் தான் என்ன?
                  கோட்சார சனிபகவான் கடைதெரு ராசியான துலாத்தில் தங்கியது. இப்படி பார்த்தால் சனி பகவான் துலாராசி பிரவேசம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டதே. இல்லாததை இருப்பது போல் காட்டக்கூடிய கிரகம் உங்களுக்கே தெரியும் ராகு என்று. இப்படிப்பட்ட ராகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கடைத்தெரு ராசியான துலாத்தில் சனியுடன் கூடியது. அப்பொழுதும் மார்கட் நிலவரம் ஓரளவு சமாளிக்க கூடியதாகவே இருந்தது. ராகுவோ சனியோ ஒரு கெடுதல் செய்ய வேண்டுமென்றால், அதை தூண்டி விடகூடியவர் ஒருவர் இருந்தாக வேண்டும். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ரிஷப ராசியில் பகை ஸ்தானத்தில் அல்லல்லுற்ற குரு பகவான் மறுபடியும் பகை வீடான மிதுனத்திற்குள் புகுந்தார். புகுந்தவுடன் மிருகசிரிஷ நட்சத்திரத்தில் இருந்த வரை அமைதியாகவே தென்பட்டார். திருவதிரைக்குள் நுழைந்தவுடன் துள்ளிகுதித்தார், ஜோதிடத்தில் கிரியாவூக்கி கிரகம் குரு என்று ஜோதிடர்களுக்கு நன்கு தெரியும். மேலும் ஏற்கனவே என்ன காரணம் வரும் என்று எதிர்பார்த்த சனியுடன் கூடிய ராகு, இந்த துள்ளி குதிக்கும் குருவின் பார்வை பெற்றவுடன், இதுவே கிரியாஊக்கியாக அமைந்து வர்த்தகத்தில் தலைகிழ் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். இது இந்தியாவை எப்படி பாதித்தது என்றால், இந்தியாவின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம். ஆக, ஜென்மராசியின் ஜீவன வர்த்தக ஸ்தானமான மேஷராசியில் உள்ள கேதுவை குருபார்வை பெற்ற சனியும் ராகுவும் பார்த்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு படுபாதாளத்திற்கு சென்று விட்டது. அமெரிக்க டாலர் மதிப்பு கொடிகட்டி பறக்கின்றது. தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுகிறது. நாடு முழுவதும் பணவீக்கம் என்ற செய்தி காற்றாய் பறக்கின்றது. இந்தியாவின் ஜென்ம ராசியான கடகத்திற்கு பாக்கிய ஸ்தானமான மீன ராசியின் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் மறைவாதால் தங்கத்தினை அனுபவத்திற்கு என்று வாங்காமால், அதையே முதலீட்டாக நினைத்து வாங்க காரணம், இதே ஜென்ம ராசியான கடகத்திற்கு ஆறாமதிபதியான குரு, பன்னிரண்டாம் வீட்டில் மறைந்து வீபரீத ராஜயோகம் ஏற்படுவதால் தான் முதலீட்டு மாற்றம்.
               சரி, இந்தியாவில், ரிசர்வ் பேங்க் மற்றும் வெளிநாடு வர்த்தக கொள்கையில் மாற்றங்கள் வந்துவிட்டது. இதற்க்கு காரணம் குரு பகவான் தனது சுயச்சாராமான புனர்பூசம் சென்ற காரணத்தால் தான். இவை முழுமை அடைந்து ஒரு சீரான மாற்றம் கூடியவிரைவில்  எதிர்பார்க்கின்றது. இருந்தாலும் குரு வக்கிரம் பெற்று மறுபடியும் திருவதிரைக்குள் வரபோகின்றார். உஷாராக வியாபாரிகள் இருக்கவேண்டும், தங்கத்தின்விலை மாற்றம் மறுபடியும் மாறலாம். 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================