மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 27 ஜூன், 2013

திருமண 10 பொருத்தங்கள் - 10 Poruththangal

திருமண   பத்து   பொருத்தங்கள் 



                                       திருமண பத்து பொருத்தங்களில் முதல் பொருத்தம் தின பொருத்தம். தினம் எனபது அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பெயர்.

 

 

ஜோதிடத்தில் இரண்டாவதாக மிக முக்கிய பொருத்தமாக கருதபடுவது கனப்பொருத்தம். தேவகணம் உள்ளவர்கள் சத்துவ குணம் அதிகம் இருக்கும். ராட்சச குணம் உள்ளவர்கள் அரக்க குணம் மூர்கத்தனம் அதிகம் இருப்பவர்கள். மானுஷ குணம் உள்ளவர்களுக்கு தாமச குணமும் மூர்க்க குணமும் சிறிதளவு சத்துவ குணமும் கலந்து இருக்கும். பெண்கள் தேவ கனத்தில்இருந்தால் வீடு மிக அமைதியாக இருக்கும். ராட்சஸகனத்தில் இருந்தால் சத்தம் அதிகம் இருக்கும் ஆனால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 

திருமண பொருத்தங்களில் மகேந்திர பொருத்தம் குழந்தை பிறப்பை நமக்கு சொல்லும். இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் ஜாதக கட்டத்தில் மாப்பிள்ளையின் ஐந்தாம் இடம் வலுபெற்று இருந்தால் இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யாலாம்.
 

கல்யாண பொருத்தம் பார்ப்பதில் பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் உள்ளதா என்று இந்த பொருத்தத்தை பார்த்து தான் கூற இயலும். ஜாதகத்தில் ஒரு பெண் விதவை கோலம் போடுவாளா இல்லை என்றும் சுமங்கலியாக இருப்பாளா என்பதை அறிய பெண்ணின் குடும்ப ஸ்தானத்தை உற்று நோக்க வேண்டும். மேலும், மாப்பிள்ளையின் ஆயுள் பலத்தை ஷட் பல நிர்ணய வீதிகளின் படி ஆய்வு செய்து திருப்தி அடைந்த பின்னர் இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யாலாம் என கூறலாம். இல்லாவிட்டால் இந்த பொருத்தம் அவசியமாகிறது.

திருமணம் செய்து கொள்வது எதற்காக..? இருவரும் சேர்ந்து இன்பமுடன் இணைந்து ஈடில்லா மகிழ்ச்சி அடைவதற்காக தானே. சிற்றின்பத்தை ஆசை தீர அனுபவிப்பார்களா இல்லையா என்பதை இந்த யோனி பொருத்தம் நமக்கு எளிதில் கூறிவிடும்.  இதை வெளிப்படையாக கூற இயலாது. இதில் சில மறைபொருள்கள் அடங்கியுள்ளது. ஜோதிடத்தில் ஆர்வமும் சமுகசேவை நோக்கமும் உள்ள ஜோதிடர்களுக்கு மட்டும் விளக்க வேண்டும். இன்றைக்கு விவாகரத்துக்கு தொண்ணுறு சதவிகித காரணங்களுக்கு இந்த பொருத்தம் இல்லாததே காரணம்.

 
 
 


திருமணம் என்று சொன்ன உடனே மாப்பிள்ளை என்ன ராசி, பெண் என்ன ராசி என்று கேட்கிறார்கள். இருப்பது மொத்தம் பன்னிரண்டு ராசிகள். இதில் ஆண் ராசிக்கு பெண் ராசி ஆறு அல்லது ஏட்டில் மறைந்து இருந்தால் இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசவே இயலாது. எப்பொழுதும் பிஸி பிஸி என்று இருவரும் இருப்பார்கள்.  இருவரும் அன்னியோனியமாக பேசுவதற்க்கே டைம் டேபிள் போட்ட பிறகு தான் பேச முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. இவர்கள் எப்படி இல்லறத்தை நல்லறமாக செயாமுடியும் என்று. இருந்தாலும், இருவர் ஜாதகத்திலும்  இந்த விதிக்கு மாற்று விதி இருந்தால் தாரளமாக திருமணம் செய்யலாம்.

 


திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் மனதிற்குள் எந்தெந்த ஆசைகள் உள்ளது எனபது தெரிந்தால், இவரது ஆசையை அவர் கேட்காமலே செய்வார். இப்படி செய்யும் போது இவர் மனம் நாம் நினைத்ததை செய்துவிட்டாரே என்று நினைக்கும் போதே இன்பம் மேலோங்கும். இப்படி இல்லாமல், இவர் சினிமாவிற்கு போலாம் என்றால், இல்லை இல்லை கடைக்கு போக வேண்டும் என்று சொல்லுவார்கள். ஒருவர் சொல்லுக்கு மாற்று கருத்து சொல்லுவார்கள். இப்படியே தினம் தினம் மாற்று கருத்து இருந்தால், என்ன நடக்கும்...? ஒன்று சண்டை நடக்கும் இல்லாவிட்டால் இவர் வழியில் இவர் போவார், அவர் வழியில் அவர் போவார்....தாம்பத்யம் தடம் புரளும்.

கல்யாணம் ஆனவுடன் பெண்டாட்டி காலில் விழ்ந்துவிட்டான் என்று பரவலான பேச்சினை கேட்டு இருப்பிர்கள். இப்படி இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் இன்ப உலகத்திற்கு சென்று விட்டார்கள் என்று அர்த்தம். ஆணுக்கு பெண் வசியமாதல், பெண்ணுக்கு ஆண் வசியமாதல், இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசியமாகி விட்டால் பக்கத்தில் வெடியே வெடித்தாலும் அவர்களுக்கு தெரியாது. " நீ என்னென்ன செய்தாலும் இனிமை, நீ என்னென்ன சொனாலும் புதுமை.." என்ற பழைய எம்ஜிஆர் பாடல் போன்று அவர்கள் வாழ்க்கை அமைந்து விடும். இந்த பொருத்தம் இல்லாவிட்டால், "இத கட்டி என்னத்த சுகம் பெற்றேன்.." என்று அங்காளாயித்து கொள்வார்கள்.

 


திருமண போருத்தன்களிலே மிக மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜு பொருத்தம். ரஜ்ஜு தட்டுகிறது என்று ஜோதிடர்கள் சொல்ல கேட்டிருப்பிர்கள். ரஜ்ஜு தட்டுகிறது என்றால் இருவரும் ஒரே ரஜ்ஜு குருப்பில் உள்ள நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்று அர்த்தம். நட்சத்திரங்களை ஐந்து குருப்பாகபிரித்துள்ளனர். முதல் குருப்பு தலை குருப்பு. இரண்டாவது கழுத்து குருப்பு. முன்றாவது வயிற்று குருப்பு. நான்காவது தொடை என்கின்ற மர்மஸ்தான குருப்பு. ஐந்தாவதாக கால் பாதம் குருப்பு. ஒரு குருப்பில் உள்ளவர்கள் அதே குருப்பில் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ள கூடாது. அப்படி செய்து கொண்டால் தெய்வ அனுகிரகம் இல்லாதவர்களுக்கு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கருதபடுகிறது. முக்கியமாக சிரசு மற்றும் கண்டம் ரஜ்ஜு குருப்பு வேதனையை அளித்து விடும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. பத்து பொருத்தங்களில் இந்த பொருத்தம் இல்லாவிட்டால், ஜாதக பொருத்தம் இருந்தாலும் திருமணம் செய்யகூடாது என்று ஜோதிட நூல்கள் சொல்கிறது. மிகவும் ஆழமாக ஆராய்ந்தால் பல விதமான ரகசியங்கள் இந்த பொறுத்தத்தில் மறைந்துள்ளது மேலும் இதை வெளிப்படையாக மக்களிடம் கூறுவதும் முறையற்றது.
 
 

 

திருமண பத்து பொருத்தத்தில் கடைசி பொருத்தமாக இந்த வேதை பொருத்தம் உள்ளது. வேதை என்பது எதிர் மறையானது என்று பொருள். சிலர் இதை வேதிக்கின்றது...அதாவது ரசாயன மாற்றம் அடைகின்றது. வேதித்தல் என்பதால் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாறுவது உதரணமாக.. சாணிஎடுத்து பிள்ளையார் பிடிக்கலாம் என்று பார்த்தால் அது குரங்காக வந்துவிட்டது என்று சொல்ல கேட்டிருப்பிர்கள். அது போல் தான் இது.  வேதை என்பதை வேதனை செய்யும் என்பதாகவும் பொருள் கொள்ளல்லாம்.

திருமணத்திற்கு பத்து பொருத்தம் மட்டும் போதாது என்றும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேல் பொறுத்த விதிகள் உள்ளதாக பலவித ஜோதிட சுவடிகள் நமக்கு சொல்கிறது. இருந்தாலும், இன்று நாம் பரவலாக இந்த பத்துடன், நாடி பொருத்தம் மற்றும் விருக்ஷ பொருத்தத்தையும் சேர்த்து பார்க்கின்றோம்.

இறைவனின் அனுகிரகம் மணமக்களுக்கு இருந்தால் சில பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் இன்பத்திற்கு எல்லையில்லாமல் வாழ்வார்கள்.----- M.பாலசுப்ரமணியன், நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
 
 
==========================================================================================
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================
 
 

8 கருத்துகள்:

  1. OPEN ALL SECRATE GURU. ABIRAMI JOTHIDAR GURU.

    பதிலளிநீக்கு
  2. டியர் ரவி, அபிராமி ஜோதிடம், வேலூர்.
    அன்புள்ள ரவி,
    ஜோதிட ரகசியங்களை ஜோதிடர்களே பல பேர் தெரிந்து கொள்ளாமல் உள்ளதால் இதை பிரசுரிக்க நேர்ந்தது. மேலும் இது குறித்த விழிபுனர்வுகளை மக்களும் தெரிந்து கொண்டால் தான் அதற்கேற்ற கேள்விகளை ஜோதிடரிடம் கேட்பார்கள். ஒரு திறமையான ஜோதிடன் இதற்கு விளக்கம் அளிப்பான். இதனால் மக்கள் தெரிந்து கொள்வார்கள் திர்மயுள்ள ஜோதிடன் யார் என்று. இது திறமையுள்ள நமக்கு நல்லது தானே.
    ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன். நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

    பதிலளிநீக்கு
  3. Dear Sir, It's very useful for everyone. Thanking you By K.Sanjai

    பதிலளிநீக்கு
  4. Dear Sir, It's very useful for everyone. Thanking you By K.Sanjai

    பதிலளிநீக்கு
  5. Dear Sir, It's very useful for everyone. Thanking you By K.Sanjai

    பதிலளிநீக்கு
  6. ஐயா நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.என் மனைவி முஸ்லீம்.நான மிதுனம் ராசி புனர்பூசம். மனைவி கும்பம் ராசி பூரட்டாதி.பொருத்தம் பார்த்தால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை நான் இப்பொழுது என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
  7. கணபொருத்தம் அவசியமா

    பதிலளிநீக்கு
  8. Ayya vanakam. Portham paathatil 10ku 9thu porutham iruku.. Aanal yoni mattum illai.. Thirumanam seiyalam illaiya

    பதிலளிநீக்கு