மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 மே, 2013

குரு பெயர்ச்சி மகா யாகபூஜை photos

Meeting 26-5-2013


 26-5-2013 அன்று நடைபெற்ற 
குரு  பெயர்ச்சி மகா யாக பூஜை
மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற ஜோதிட பட்டிமன்றம் தொடர்பான படங்கள்.

ஜோதிட பட்டிமன்ற தலைப்பு:
                 திருமணத்திற்கு முக்கியமானவர்               குருவா...?  சுக்ரனா....?

பேச்சாளர்கள்:
நிறுவனர் ஜோதிடமாமணி பாலசுப்ரமணியன்  
ஜோதிடசிகரம் காஞ்சிபுரம் வடிவேலு 
ஜோதிடபாரதி கே.ஆர். வைத்தியநாதன்.
ஜோதிடசிக்ம் Prof . கே.சண்முகம்.
ஜோதிடவித்தகர் ஜெயராதே.
ஜோதிட சிகரம் ரவிகுமார்
 ஜோதிடஸ்ரீ  ரவிராஜன்.
ஜோதிட ஸ்ரீ சுரேஷ் பாபு.
ஜோதிட ஸ்ரீ சத்தீச்வரி.
ஜோதிட ஸ்ரீ கெஜவல்லி 
ஜோதிடர் சிவலிங்கம் மற்றும் பலர் பேசினார்கள்.





 
 
 


 
 





 
 

 
 
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 










Guru Peyarchchi Yaga Puja



 
 



குரு பெயர்ச்சி பலன்கள் Guru Peyarchi Palangal


குரு பெயர்ச்சி பலன்கள்

தோவானாம்ச ரிஷீணாம்ச குரும்
புத்தி பூதம் த்ரிலோகேஸ்ம்
காஞ்சன ஸந்நிபம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

         நவகிரகங்களில்முக்கிய ராஜகிரக மாக இருப்பவர் குரு. கோட்சார கிரக பெயர்ச்சிபடி குரு எனபடுகின்ற பிரஹஸ்பதி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசி விதம் இடம்பெயர்கிறார். அவ்வமயம் அவர் பார்வையில் படும் ராசிகளின் காரகதுவங்களுக்கு ஏற்ப பலாபலன்களை வாரி வழங்குகிறார். இந்த சுபஸ்ரீ விஜய வருஷம், வைகாசி மாதம், 14-ம் தேதி
(28-5-2013) இரவு 9 மணி 18 நிமிடத்திற்கு ரிஷப ராசியில் உள்ள மிருகசிரிஷம் 2-ஆம் பாதத்தில் இருந்து, மிதுனராசி மிருகசிரிஷம் 3-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
         சர்வ வல்லமை பெற்ற குருவின் மிதுனராசி பிரவேசம் அனேக நன்மைகளை செய்வதுடன், லோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ரட்சித்து பெரிய பெரிய பாக்கியங்களை ஏற்படுத்த போகிறார்.
          குருபகவான், மிதுன ராசியில் தங்கி இருக்கும் ஒருவருட காலத்தில் பொதுபலனாக எல்லோருக்கும் நன்மைகள் பல செய்தாலும், ஒவ்வொரு ராசினருக்கும் அவர் தனிப்பட்ட முறையில் செய்யகூடிய யோக மற்றும் அவயோக பலன்களை இங்கு நாம் பார்ப்போம்.
இங்கு தரப்பட்டுள்ள பலன்களுடன் அவரவர் களின் நடப்பு தசா புக்தி பலன்களை கருத்தில் கொண்டு பலன் அறியவும்.




 மேஷ ராசி:   

        மேன்மை பொருந்திய மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு குடும்ப ஸ்தானத்தில் இருந்து வெளிப்பட்டு, வீரதைரிய இடமான முன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். மனைவி வகையில் நல்ல பலன்கள் ஏற்படும். மனைவிக்கு முக்கியத்துவம் குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுப்பார்கள். லக்ஷ்மிகடாஷம் ஏற்படும். வெகுநாள் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். தொழில்,

           வர்த்தக துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு தற்போதுள்ள மனஉளைச்சல், டென்ஷன் போன்றவை வருடத்தின் பிற்பாதியில் காணாமல் போகும். வீடுவாசல் வாகன வகையில் சில தொந்தரவுகள் வந்துபோகும். இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை காலபைரவரையும், பரணியில் பிறந்தவர்கள் வெள்ளிகிழமை தோறும் குல தெய்வத்தையும் , கிருத்திகையில் ஜெனித்தவர்கள்  ஞாயிறுதோறும் சிவனையும், வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.  



ரிஷப ராசி:

அமைதியின் இருப்பிடமான ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியை விட்டு குரு, குடும்ப ஸ்தானா இடமான இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். குடும்பத்தில் பூஜை பூனஸ்காரங்கள் மேற்கொள்வீர்கள். இதுவரை உடல் என்ன உபாதை என்று தெரியாமலே கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, இதுவரை இருந்த உடல் கஷ்டங்கள் மறைந்து போகும். பழைய கடன்கள் அடைபட்டு, புதிய கடன்களை அரசு வங்கிகளில் வாங்கி சில நல்ல உபயோகமான காரியங்களை

செய்வீர்கள். படித்துவிட்டு வேலைக்காக உள்ளவர்களுக்கு மிக நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்தில் குதூகலங்கள் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு வசதி வாய்ப்புள்ள நல்லவரன் வரும். வெளியூர் வாசம் ஒரு சிலருக்கு ஏற்பட்டு, அதனால் தூக்மின்மையும், அலைச்சலும் ஏற்பட வாய்ப்பு.
          இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிறுதோறும் சிவனையும்,, ரோகிணியில் பிறந்தவர்கள் திங்கள்தோறும் அம்பாளையும், மிருகசிரிஷத்தில் உதித்தவர்கள் முருகனை செவ்வாய் கிழமைகளில்  வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும். 





மிதுன ராசி:
          எதையும் அலசிஆராயும் குணமுள்ள மிதுனராசிஅன்பர்களே, இதுவரை பன்னிரண்டாம் இடத்தில் இருந்த குரு, தற்போது உங்கள் ஜென்மராசிக்கு வருவதால், உங்கள் கௌரவம் புகழ் சமுதாயத்தில் ஒளிவீசும். உங்கள் சிந்தனை அதிகமாகி தெளிவு ஏற்படும். மற்றவர்கள் உங்களிடம் வந்து நல்லது கேட்டது எது என்று அறிந்துகொள்வார்கள். பிள்ளைகள் வகையில் இதுவரை இருந்துவந்த குழப்பநிலை மறைந்து, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள். ஒரு சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து ஒற்றுமை ஓங்கும். மனைவி மூலம் சில ஆதாயங்கள் உருவாகும். வெகுநாள் எதிர்பார்த்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேறும். கோவில், குளம் என்று ஸ்தலயாத்திரை போவார்கள். குடும்பத்தில் வெளிநபர்களினால் சில குழப்ப லைகள் வாயிலாக ஒரு சிலருக்கு

டென்ஷன் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். மிருகசிரிஷத்தில் உதித்தவர்கள் செவ்வாய்கிழமைகளில் முருகனையும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமை தோறும் துர்கையையும், புனர்பூசத்தில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியை வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.





கடகராசி:
   பலகோணங்களில் பார்க்கும் மதியுக்தியுள்ள கடகராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு லாபஸ்தானத்தில் இருந்து வெளிப்பட்டு, அயனசயன போகபாக்கிய இடமான பன்னிரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். நல்ல உறக்கம், ஓய்வு ஏற்படும். மனைவி வகையில் நல்ல ஒத்துழைப்பு ஏற்பட்டு தாம்பத்யம் பலப்படும். சுபசெலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி பொங்கும். இதுவரை தொல்லை கொடுத்த நோய்கள் இல்லாமல் போய்விடும். பழைய கடன்கள் அடைந்து நிம்மதி பெருமூச்சி விடுவார்கள். கோர்ட் கேசுகள் பைசலாகும். ஆடை ஆபரணங்கள் சேர்கை ஏற்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். புதிய கார், வாகனம் வாங்கமுடியும்.

                 தொழில், வர்த்தகதுறையில் உள்ளவர்களுக்கு போட்டி பொறாமை ஏற்பட்டு, சில சிக்கல்களும் தொழில் மற்றங்களும் ஏற்படகூடும். இதனால், மனஉளைச்சல் குழப்பம் ஏற்பட்டு வருடத்தின் பிற்பாதியில் சரியாகும்.                   இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். புனர்பூசத்தில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியையும், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமைகளில் அஞ்சநேயரையும், ஆயில்யத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமை தோறும் வெங்கடேச பெருமளையும் வழிபட்டு வர சகலகாரியங்களும் சித்தியாகும்.





சிம்மராசி:
         சிறப்புக்கள் பல பெற்ற சிம்மராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு ஜீவன ஸ்தானத்தில் இருந்து வெளிப்பட்டு, லாபஇடமான பதினோராம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலையற்ற தன்மை நீங்கி ஸ்திரம் ஏற்படும். தொழில்வகையில் போட்டி பொறாமைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். சகோதரர்கள் வகையில் சில நன்மைகள் சேரும். பிள்ளைகள் நமக்கு புகழை சேர்ப்பார்கள். பிள்ளைகளின் பெருமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள். உத்தியோக துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு அவர்கள் கேட்ட ஊருக்கு மாறுதல் கிடைக்கும். மனைவி வகையில் நல்ல பலன்கள் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். லக்ஷ்மிகடாஷம் ஏற்படும். வெகுநாள் பிரார்த்தனை ஈடேறும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். தொழில், வர்த்தக துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாக சில சுகங்களை விட்டுகொடுக்க வேண்டிய நிர்பந்தம்

ஏற்படும். சுகம் அனுபவிக்க தடைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். இவைகள் வருடத்தின் பிற்பாதியில் விலகி சுகம் பெறுவர். இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய்கிழமை காலபைரவரையும், பூரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிகிழமை தோறும் குல தெய்வத்தையும் ,உத்திரத்தில் ஜெனித்தவர்கள் ஞாயிறுதோறும் சிவனையும், வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.




கன்னிராசி:
           அமைதியின் சின்னமான கன்னிராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், ஜீவன இடமான பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். தடைபட்ட வீடு, வாகன காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய் நொடிகள் நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் வந்து சேரும். தொழிலில் நல்ல பெயர் இருக்குமே தவிர சில எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். வேலையின் பளு கூடும்.
           குடும்பத்தில் இது வரை இருந்துவந்த குழப்பங்கள் குறைந்து ஒரு நல்ல முடிவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி பெறுவார்கள். அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனைவி வகையில் கருத்து மாற்றமும் வரலாம். மாணவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உயர்கல்வி கிடைக்கும்.
               இவர்கள்வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிறுதோறும் சிவனையும்,, ஹஸ்தத்தில் பிறந்தவர்கள் திங்கள்தோறும் அம்பாளையும், சித்திரையில் உதித்தவர்கள் முருகனை செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.



துலாம்ராசி:
     நேர்மையும் நியாயமும் உள்ள துலாராசிஅன்பர்களே, இதுவரை அஷ்டமத்தில் இருந்த குரு, தற்போது உங்கள் ஜென்மராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால், உங்கள் ராசியின் மீது குருவின் நேரடி பார்வையில் இருக்கபோகிறீர்கள். கடவுளின் அருள்  கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஏழரை சனியின் தாக்கத்தில் தத்தளித்த உங்களுக்கு இந்த குரு மாற்றம் குதுகலத்தை தந்து விடும்.சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு பெருகும். சகோதரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தோஷமான பிரயாணங்கள் ஏற்படும்.

        திருமணத்திற்கு காத்திருபோருக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணவாழ்கையில் மனைவி வகையில் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும், அவர்கள் வாழ்கையில் முன்னேற தகுந்த வழிகள் தெரியும். மனதிற்குள் புதைத்து வைத்த சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்.கோவில், குளம் என்று ஸ்தலயாத்திரை போவார்கள். தொழில், உத்தியோகம் வகையில் பலவிதமான பிரச்சனைகள் தோன்றி மறையும். குலதெய்வ வழிபாடு நடக்கும். இதுவரை இருந்த குழப்ப நிலைகள் மறைந்து ஒருவித தெளிவு ஏற்படும்.

            இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். சித்திரையில் உதித்தவர்கள் செவ்வாய்கிழமைகளில் முருகனையும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமை தோறும் துர்கையையும், விசாகத்தில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியை வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.





விருச்சிக ராசி:
     எதிலும் நகைச்சுவையாகவே மற்றவர்களின் தவறுகளை நறுக்கென்று சுட்டிக்காட்டும் விருச்சிகராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அஷ்டம இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். குரு எட்டில் மறைவது அவ்வளவு நல்லதல்ல என்றாலும், அவர் உங்கள் குடும்ப, சுக, அயனசயன ஸ்தனங்களை பார்ப்பதால் சில உன்னதமான நல்ல பலன்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் உடனடியாக ஒரு நல்ல தீர்வுக்கு வரும். மனைவி வகையில் சில ஒத்துழைப்பு ஏற்பட்டும். தாம்பத்யம் சுகத்தில் நிந்துவார்கள். மாணவர்கள் தமக்கு விருப்பப்பட்ட துறையில் மேற்படிப்பை தொடருவார்கள். சந்தோசத்திற்காக அதிக செலவு செய்வார்கள். அஜீரண கோளாறுகள் வந்து போகும். எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். தங்க நகைகள் ஆபரணங்கள் சேர்கை ஏற்படும். சிலர் புதிய மனை வாங்கி வீடு கட்டிமுடிப்பார்கள். இன்பசுற்றுலாவாக வெளிநாடு சென்றுவரவும் வாய்ப்பு ஏற்படும். புதிய வாகனம் வாங்கமுடியும். இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். விசாகத்தில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியையும், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமைகளில் அஞ்சநேயரையும், கேட்டையில் பிறந்தவர்கள் புதன்கிழமைதோறும் வெங்கடேசபெருமளையும் வழிபட்டு வர சகலகாரியங்களும் சித்தியாகும். 





தனுசுராசி:
     மற்றவர்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உண்மை கருத்துக்களை வெளிபடுத்தும் தனுசு நேயர்களே, உங்கள் ராசிக்கு ஆறாம் ஸ்தானத்தில் இருந்து வெளிப்பட்டு, சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார்.

சகோதரர்கள் வகையில் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். எடுத்த காரியம் ஜெயத்தில் தான் முடியும். உத்தியோக துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். மனைவி வகையில் நல்ல பலன்கள் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். மாணவர்கள் தங்கள் படிக்கும் படிப்பை வெற்றிகரமாக முடித்து நல்ல அதிக சம்பளத்தில் அமருவார்கள். தொழில், வர்த்தக துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பிரயாணங்கள் மூலம் வேலை பளு கூடும். பெரிய கடன்கள் வாங்கி மூலதனம் செய்ய நேரிடும்.

இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய்கிழமை காலபைரவரையும், பூராடத்தில் பிறந்தவர்கள் வெள்ளிகிழமை தோறும் குல தெய்வத்தையும், உத்திராடத்தில் ஜெனித்தவர்கள் ஞாயிறுதோறும் சிவனையும், வழிபட்டு வர சகல காரியங்களும்வெற்றியாகும்.





மகரம் ராசி:
 அவசரபடாமல் எதையும் தீர ஆராயும் மகர ராசி அன்பர்களே,உங்கள் ராசிக்கு குருபகவான் இதுவரை பஞ்சம திரிகோணத்தில் இருந்து விட்டு தற்போது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார்.

இந்த வருஷம் குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள். கையிறுப்பு கூடும். வேலை வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு மிக உயர்ந்த வேலை கிடைக்கும். ஊதியம் மிக அதிகமாக கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் சிறந்த வேலை வாய்ப்பு அமையும். இரண்டுவிதமான பணவரவு இருக்கும். வீட்டில் தங்க நகைகள் வாங்க வழி பிறக்கும். ஓய்வு கிடைக்கும். வயிறு உப்பசம் கோளாறு போன்ற பிரச்சனைகள் தோன்றி வருட இறுதியில் மறைந்து விடும்.  சுகபோகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். வீடு, வாகனம் வகையில் பிரச்சினைகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும்.

            மனைவியின் கருத்துவிற்கு எதிர்மறை கருத்துகளை கூற வேண்டி வரும். இதனால் உறவினர்கள் உங்கள் மீது வருத்தம் தெரிவிக்க ஏதுவாகும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படும்.

இவர்கள்வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். உத்திராடத்தில் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிறுதோறும் சிவனையும், திருவோணத்தில் பிறந்தவர்கள் திங்கள்தோறும் அம்பாளையும், அவிட்டத்தில் உதித்தவர்கள் முருகனை செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வர சகல காரியங்களும் ஜெயமாகும்.




கும்பம் ராசி:
   பொறுமையும் எதையும் கட்டிக்காக்கும் குணமுள்ள கும்பராசி அன்பர்களே, இதுவரை சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான், தற்போது உங்கள் ஜென்மராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருவதால், உங்களுக்கு கடவுள் அனுகூலம் கிடைக்கும். உங்கள் கௌரவம் காக்கப்படும். உங்கள் பேச்சில் தெளிவு ஏற்படும்.  பிள்ளைகள் வகையில் இருந்துவந்த குழப்பநிலை மறைந்து, நல்ல நிலையை பெறுவார்கள். ஒருசிலருக்கு இன்பசுற்றுலாவாக வெளிநாடு யோகமும் ஏற்படும். மனைவியிடம் இருந்த சிறுசிறு பிணக்குகள் இல்லாமல்போகும். ஒத்துபோகும் குணம் வந்துவிடும். எண்ணங்களும் சின்னசின்ன ஆசைகளும் நடக்கும்.கோவில், குளம் என்று ஸ்தலயாத்திரை போவார்கள்.

         தொழில், வர்த்தகதுறையில் உள்ளவர்களுக்கு அதிகம் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள். உடலில் அவ்வப்பொழுது நீர் சம்பந்தமான வியாதிகள் தோன்றி சிகிச்சைக்கு பிறகு குணமாகும்.

சகோதரவகையில் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்.

          இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். அவிட்டத்தில் உதித்தவர்கள்செவ்வாய்கிழமைகளில் முருகனையும், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமை தோறும் துர்கையையும், பூரட்டாதியில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியை வழிபட்டு வர சகலகாரியங்களும் ஜெயமாகும்.



மீனம் ராசி:
          எபோழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் மீனராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதியான குருபகவான் முன்றாம் இடத்தில் இருந்து நாலாம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி அருள்பாலிக்க போகிறார். குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் படுத்தவுடன் இனிமேல் நல்ல உறக்கம் ஏற்படும். மனைவி வகையில் ஒத்துழைப்பு தாம்பத்யம் பலப்படும். சுபசெலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி பொங்கும். இதுவரை வீடு வாகன வகையில் இருந்த மந்த நிலை அகன்று புதிய செலவுகள் இந்த வகையில் ஏற்படும். பழைய கடன்கள் அடைந்து நிம்மதி பெருமூச்சி விடுவார்கள் அதே நேரத்தில் புதிய கடன்கள் சுபகாரியங்களுக்கு கிடைக்கும்.

              தொழில், வர்த்தகதுறையில் உள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து, தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாறுதல் ஏற்படும்.  குடும்பத்தில் பணபற்றகுறை காரணமாக உறவினர்கள் மத்தியில் சில பிரச்சனைகள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டு வருடத்தின் பிற்பாதியில் அனைத்தும் சரியாகும்.

    இவர்கள் வியாழன்தோறும் நவகிரகத்தில் உள்ள குருவினை பிரத்யோகமாக வழிபட்டுவரவும். பூரட்டாதியில் ஜெனித்தவர்கள் வியாழன்தோறும் குரு தக்ஷினாமூர்த்தியையும், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிகிழமைகளில் அஞ்சநேயரையும், ரேவதியில் பிறந்தவர்கள் புதன்கிழமைதோறும் வெங்கடேசபெருமளையும் வழிபட்டு வர சகலகாரியங்களும் சித்தியாகும்.