மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

தாம்பத்யசுகமா...ஐயோ வேண்டாம்...Marital displeasures

தாம்பத்யசுகமா...ஐயோ வேண்டாம்...

                            ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திர பொருத்தத்தை விட ஜாதக பொருத்தமே மிக முக்கியமானது என்று ஜோதிடர்கள் கூறினாலும், நட்சத்திரத்தை கொண்டே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகிறது. ரஜ்ஜு பொருத்தத்திற்கு அடுத்தபடி மிக முக்கியமான பொருத்தமாக யோனி பொருத்தம் கருதபடுகிறது. இந்த பொருத்தம் இல்லவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பகை யோனியுடன் திருமணம் நடந்துவிட்டால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்கு தாம்பத்யசுகம் என்றாலே ஒருவித பயம் ஏற்பட்டு, ஐயோ சாமி எனக்கு எந்த சுகமும் வேண்டாம் என்று அலறுவார்கள். மலரினும் மெல்லியது காதல், அதனினும் மெல்லியதாக காமம் இருந்தால்தான் இன்பம்.
இது போன்று அலறும் நட்சத்திரகாரர்களை இப்பொழுது பார்ப்போம்.
                              திருவாதிரை, மூலம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரகாரர்கள் சித்திரை மற்றும் விசாகம் நட்சத்திரகாரர்களை கண்டாலே பயப்படுவார்கள். அவர்களிடம் தனியாக எப்பொழுதும் இருக்க மாட்டார்கள். இந்த இரு நட்சத்திரங்கள் புலி யோனியாக வருவதால் இந்த பயம் ஏற்படுகிறது. இந்த இரு நட்சத்திரகாரர்களை மேற்கூறிய நட்சத்திரகாரர்கள் திருமணம் செய்துகொண்டால் சாந்தி முகூர்த்தம் முதல் கொண்டே தாம்பத்யசுகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மேற்கூறிய நட்சத்திரகாரர்கள் பிரிந்து சென்றுவிடவும் வாய்ப்பு உள்ளது.
                      இதே போன்று மகம் பூரம் நட்சத்திரகாரர்கள் யோனி எலியாக வருவதால், பாம்பு யோனியான ரோகினி, மிருகசிரிஷம் மற்றும் பூனை யோனியான பூனர்பூசம் ஆயில்யம் நட்சத்திரகாரர்களை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்டுவிடுவார்கள். இவர்கள் தாம்பத்ய சுகத்தை எங்ஙனம் அனுபவிப்பது. இதேபோலே பூனையோனி & பாம்புயோனி உள்ளவர்கள் இதுபோன்ற எலியோனி உடையவர்களை திருமணம் செய்துகொண்டால் இவர்களுக்கு இந்த ஒரு எலி பத்தாமல் வெளியில் சென்று வரவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதே போன்று பூராடம், திருவோணம் நட்சத்திரகாரர்கள் கிருத்திகை, பூசம் இடம் பயந்துவிடுவார்கள். அஸ்வினி சதயம் யோனியாக குதிரை வருகிறது, இதற்கு பகையாக மாடு யோனியாக அஸ்தம், சுவாதி, உத்திராடம் & உத்திரட்டாதி வருகிறது.
                    பகையாக வரும் நட்சத்திரகாரர்களை பார்த்து பயப்படுவதும், அவர்களுக்கு இவர்கள் போதிய திருப்தியை தரமுடியவில்லை என்பதால் அவர்கள் தாம்பத்யசுகத்தில் தடம்மாறி செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
                       சிலருக்கு இது போன்ற பாதிப்புகள் வாரது, காரணம் அவர்கள் ஜென்ம சந்திரனை குரு பார்ப்பதும், அவர்களின் களத்திர ஸ்தானத்திற்கு சுபர்கள் பார்வை ஏற்படுவதுதே.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக